சென்னை காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 12 மணி அளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒரு மர்ம நபர், வாக்கு எண்ணும் மையங்களான அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரி உள்பட 5 இடங்களில் நாளை காலை 10 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார், மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். அந்த எண் குரோம் பேட்டையை சேர்ந்த த.மு.மு.க. பிரமுகரின் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு அவரது வீட்டு முகவரியில் வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்த போது குறிப்பிட்ட செல்போன் எண்ணை வாங்கவில்லை என்று கூறினார். எனவே மர்ம ஆசாமி த.மு.மு.க. பிரமுகரை சிக்க வைக்க அவரது பெயரில் போலி அடையாள அட்டை கொடுத்து செல்போன் எண் வாங்கி இருப்பது தெரிந்தது. மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து சென்னை அரசு மருத்துவமனை, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி உள்பட 5 இடங்களிலும் இன்று காலை ஏராளமான போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.