ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஹன் குல்லு என்ற விவசாயி பேருந்தின் மேற்கூரையில் உட்கார்ந்து பயணம் செய்துள்ளார். அவ்வாறு பயணம் செய்கையில் எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்ததால், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது ஊருக்கு அருகில் மருத்துவமனை இல்லாததால் நீண்ட தூரத்தில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லவேண்டியிருந்தது.
மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றினர். அதன் பிறகு குல்லு, இனிமேல் யாரும் தங்கள் ஊரில் சிகிச்சை வசதி இல்லாமல் தவிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை மருத்துவமனை கட்ட தானமாக வழங்கியுள்ளார். விரைவில் அங்கு மருத்துவமனை துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்லு தானம் செய்துள்ள நிலத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.