வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டது குறித்து விசாரிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், மறுபடியும் பிரச்சனையில் சிக்கியுள்ளார் ராகுல் காந்தி. பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் கொல்லப்படுவார்கள் என்று ராகுல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூறியதற்காக அவர் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன்னில் மே 1ந் தேதி நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே ராகுல் இவ்வாறு பேசியிருந்தார். இது குறித்து பா.ஜ.க தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. பா.ஜ.க.வின் புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை ராகுல் மீறியதற்கான முகாந்திரம் உள்ளதாக கூறியுள்ளது. மற்ற கட்சிகளின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக ஆதாரமற்ற கருத்துகளை கூறுவது தவறு என ஆணையம் கருதுகிறது. வரும் 12ந் தேதிக்குள் இது குறித்து விளக்கமளிக்குமாறு ராகுலுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன்னில் மே 1ந் தேதி நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே ராகுல் இவ்வாறு பேசியிருந்தார். இது குறித்து பா.ஜ.க தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. பா.ஜ.க.வின் புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை ராகுல் மீறியதற்கான முகாந்திரம் உள்ளதாக கூறியுள்ளது. மற்ற கட்சிகளின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக ஆதாரமற்ற கருத்துகளை கூறுவது தவறு என ஆணையம் கருதுகிறது. வரும் 12ந் தேதிக்குள் இது குறித்து விளக்கமளிக்குமாறு ராகுலுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.