ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் முன்வைத்த பரிந்துரைகளில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜ்பக்சே தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வெளியுறவு துணை அமைச்சர் செய்கி கிஹாரா, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, "இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்ற இலங்கை தயாராக இருக்கிறது. இந்த உண்மையை பிற நாடுகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும்" என ஜப்பான் பிரதமரிடம் ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்தது குறித்து ஜப்பான் அமைச்சர் கூறுகையில்: "இத்தீர்மாணம் இலங்கைக்கு எந்தவிதத்திலும் உதவாது. மேலும், இலங்கை அதன் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தானே தீர்வு காணும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனாலேயே தீர்மானத்தை புறக்கணித்தோம்" என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.