பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிடும் வாரணாசியில் இன்று கடைசிக் கட்ட பிரச்சாரம் நடந்தது . இன்றைய தினத்தில் காங்கிரசின் ராகுல் காந்தி வாரணாசியில் வீதிப் பிரச்சாரம் மேற்கொண்டார் . இதனை பலர் மோடி ராகுலின் அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டதற்கு போட்டியாகக் கருதினர் .
அப்போது ராகுல் அளித்த பேட்டியில் , காங்கிரசு மக்களின் கனவை நிறைவேற்றும் ஆனால் மோடி அதானியின் கனவை தான் நிறைவேற்றுவார் . பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளது , ஆனால் இந்தியா அன்பால் இயங்குகிறது . இந்தியா ஹிந்து , முஸ்லிம் , கிருத்துவம் என அனைவருக்கும் ஆனது . அனைத்து சமய , அனைத்து சாதி மக்களுக்குமானது . மோடிக்கு இந்தியாவைப் பற்றிய புரிதல் தெரியவில்லை . இந்தியாவிடம் சக்தி இருக்கிறது , அதை தனியாக கொடுக்க தேவையில்லை . இந்தியாவின் பெண்களுக்கு சக்தி கொடுக்கும் நீங்கள் முதலில் அவர்களுக்கு மரியாதை கொடுங்கள் என்றார் .
அப்போது ராகுல் அளித்த பேட்டியில் , காங்கிரசு மக்களின் கனவை நிறைவேற்றும் ஆனால் மோடி அதானியின் கனவை தான் நிறைவேற்றுவார் . பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளது , ஆனால் இந்தியா அன்பால் இயங்குகிறது . இந்தியா ஹிந்து , முஸ்லிம் , கிருத்துவம் என அனைவருக்கும் ஆனது . அனைத்து சமய , அனைத்து சாதி மக்களுக்குமானது . மோடிக்கு இந்தியாவைப் பற்றிய புரிதல் தெரியவில்லை . இந்தியாவிடம் சக்தி இருக்கிறது , அதை தனியாக கொடுக்க தேவையில்லை . இந்தியாவின் பெண்களுக்கு சக்தி கொடுக்கும் நீங்கள் முதலில் அவர்களுக்கு மரியாதை கொடுங்கள் என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.