இந்தியாவில் தேர்தல் முடிந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வருகிற 16 ஆம் தேதி வரவிருக்கிறது . இதை நாம் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் பல உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றன .
இன்று அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த பேட்டியில் , புதிய அரசு ஆட்சியில் அமருவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் , அவர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் காலத்தை சிறப்பாக மாற்ற காத்திருக்கிறோம் . உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தேர்தலை நடத்தி முடித்து , ஜனநாயகத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது . இதை செய்து காட்டிய இந்திய மக்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் என்று கூறினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.