தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை (மே 14) கோடநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், கடந்த மாதம் 27-ம் தேதி சென்னையி லிருந்து விமானம் மூலம் கோவை சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு சென்றார். 20 நாட்கள் கோடநாட்டில் தங்கியிருந்த முதல்வர் வரும் 16-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால், நாளை (மே 14) கோடநாட்டிலிருந்து சென்னை புறப்படுகிறார். டிசம்பர் மாதம் கோடநாடு வந்து ஒரு மாத காலம் தங்கியிருந்த முதல்வர் மூன்று மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் கோடநாடு சென்றிருந்தார். தற்போது இருபது நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னை திரும்புகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், கடந்த மாதம் 27-ம் தேதி சென்னையி லிருந்து விமானம் மூலம் கோவை சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு சென்றார். 20 நாட்கள் கோடநாட்டில் தங்கியிருந்த முதல்வர் வரும் 16-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால், நாளை (மே 14) கோடநாட்டிலிருந்து சென்னை புறப்படுகிறார். டிசம்பர் மாதம் கோடநாடு வந்து ஒரு மாத காலம் தங்கியிருந்த முதல்வர் மூன்று மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் கோடநாடு சென்றிருந்தார். தற்போது இருபது நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னை திரும்புகிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.