BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 3 May 2014

தூர்தர்ஷன் தொலைகாட்சியை பார்க்கவே எனக்கு பரிதாபமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது- நரேந்திர மோடி

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நரேந்திர மோடியின் நேர்காணல் நிகழ்ச்சியின் சில பகுதிகள் நீக்கப்பட்டதை, பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் சர்க்கார் ஒப்புக்கொள்வதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அதில் அவர், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் மனீஷ் திவாரியின் அழுத்தத்தின் காரணமாகவே மோடியின் நேர்காணலின் சில பகுதிகள் நீக்கப்பட்டதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து நரேந்திர மோடி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி சுதந்திரம் இன்றி தவிப்பதாக கூறியிருந்தார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியதாவது:

"நாம் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்ட அவசர காலத்தை கண்கூடாக பார்த்துள்ளோம். அது நமது ஜனநாயகத்தின் மீதான கரும்புள்ளி. அதே நிலையே தற்போது மீண்டும் பார்க்கப்படுகிறது. நமது தேசிய தொலைக்காட்சியை பார்க்கவே எனக்கு பரிதாபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அந்த தொலைக்காட்சி தனது தொழில் சுதந்திரத்தைக் காக்க பெரும் பாடுபடுகிறது”

இவ்வாறு நரேந்திர மோடி டிவிட்டரில் கூறியிருந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media