பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலையில் வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் ஸ்வாதி (24) பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல் துறை, உளவுப் பிரிவு மற்றும் க்யூ பிரிவு போலீஸார் முதல்கட்ட விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சென்ட்ரல் ரயில் நிலைய 9-வது பிளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றதும் அடையாளம் தெரியாத 2 பேர் கையில் சிவப்பு பையுடன் அதில் ஏறுகின்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் ரயிலில் இருந்து இறங்குகின்றனர். அப்போது அவர்களிடம் அந்த பை இல்லை. அடுத்த சில நிமிடங்களில் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் குண்டு வெடிக்கிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் எஸ்-5 பெட்டியின் மிக அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி யுள்ளன.
குண்டுகளை வைத்தபின், அந்த சிவப்பு பையை தண்டவாளம் அருகிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். குண்டு வெடித்த பின்னர் சோதனைக்காக அழைத்து வரப்பட்ட போலீஸ் மோப்ப நாய், அந்த பையை கண்டுபிடித்து கவ்வி எடுத்து போலீஸாரிடம் கொடுத்தது. அந்த பையில் வெடிமருந்து வாடை அடித்ததால்தான் அதை மோப்ப நாய் கவ்வி எடுத்துள்ளது. பையில் சோதனை செய்த போலீஸார், வெடிமருந்து துகள்கள் இருந்ததை உறுதி செய்துள்ளனர்.
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி ஜாஹிர் உசேன், அண்மையில் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்தே இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. எனவே, ஜாஹிர் உசேன் கைதுக்கும் இரட்டை குண்டு வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதாக சிபிசிஐடி போலீஸார் நம்புகின்றனர். எனவே, தமிழகத்தை குறிவைத்துதான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் இருந்து குண்டு வெடிக்கும் காட்சிகள் கிடைத்துள்ளன. "குண்டு வெடிப்பதற்கு சில விநாடிகள் முன்பு ரயிலில் இருந்து இறங்கி ஒருவர் ஓடுகிறார். அவர் மீது சந்தேகம் இருக்கிறது. அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பாட்னாவில் சமீபத்தில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு போலவே சென்னையிலும் நடந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஜாஹீர் உசேனுக்கும் சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை" என்று சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.
சென்ட்ரல் ரயில் நிலைய 9-வது பிளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றதும் அடையாளம் தெரியாத 2 பேர் கையில் சிவப்பு பையுடன் அதில் ஏறுகின்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் ரயிலில் இருந்து இறங்குகின்றனர். அப்போது அவர்களிடம் அந்த பை இல்லை. அடுத்த சில நிமிடங்களில் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் குண்டு வெடிக்கிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் எஸ்-5 பெட்டியின் மிக அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி யுள்ளன.
குண்டுகளை வைத்தபின், அந்த சிவப்பு பையை தண்டவாளம் அருகிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். குண்டு வெடித்த பின்னர் சோதனைக்காக அழைத்து வரப்பட்ட போலீஸ் மோப்ப நாய், அந்த பையை கண்டுபிடித்து கவ்வி எடுத்து போலீஸாரிடம் கொடுத்தது. அந்த பையில் வெடிமருந்து வாடை அடித்ததால்தான் அதை மோப்ப நாய் கவ்வி எடுத்துள்ளது. பையில் சோதனை செய்த போலீஸார், வெடிமருந்து துகள்கள் இருந்ததை உறுதி செய்துள்ளனர்.
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி ஜாஹிர் உசேன், அண்மையில் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்தே இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. எனவே, ஜாஹிர் உசேன் கைதுக்கும் இரட்டை குண்டு வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதாக சிபிசிஐடி போலீஸார் நம்புகின்றனர். எனவே, தமிழகத்தை குறிவைத்துதான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் இருந்து குண்டு வெடிக்கும் காட்சிகள் கிடைத்துள்ளன. "குண்டு வெடிப்பதற்கு சில விநாடிகள் முன்பு ரயிலில் இருந்து இறங்கி ஒருவர் ஓடுகிறார். அவர் மீது சந்தேகம் இருக்கிறது. அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பாட்னாவில் சமீபத்தில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு போலவே சென்னையிலும் நடந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஜாஹீர் உசேனுக்கும் சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை" என்று சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.