பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று பலத்தரப்பட்ட தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் பொய் என நிராகரித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் கூறியதாவது:
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி அடையும். தேர்தலுக்கு பிந்தய கருத்துக் கணிப்புகள் என்பது எப்போதுமே நிரைவேறாத ஒன்றாகத் தான் இருக்கிறது. 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புகள் போலவே இம்முறையும் . பாஜக வெற்றியடையும் என்ற கருத்துக்கணிப்புகளும் பொய்யாகும். நரேந்திர மோடியை பிரதமராக நினைத்துப் பார்ப்பது கூட கடினமானது.
மேலும் தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது உறுதியான ஒன்று. அங்கும் பாஜக வெற்றி பெறும் என்பது நிச்சயம் உண்மைக்கு புரம்பானது.
இவ்வாறு ஜெயராம் ரமேஷ் கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.