ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா . 39 வயதான இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் உள்ளார் . இந்த நிலையில் இவரை தெலுங்கு நடிகர் பிரபாசுடன் இணைத்து சில இணையதளங்கள் ஆபாச செய்தி வெளியிட்டனர் . இதனால் அவர் ஆபாசமாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி ஷர்மிளா போலிஸாரிடம் பூகார் கொடுத்தார் . இதனையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர் .
ஷர்மிளா அளித்த பேட்டியில் ,"என்னை அரசியல் ரீதியாக விமர்சிக்க முடியாதவர்கள் இப்படி துஷ்பிரயோக பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதை ஒரு இந்திய கலாச்சார பெண்ணுக்கு, ஒரு கணவரின் நல்ல மனைவிக்கு, ஒரு தாய்க்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருதுகிறேன். நான் பிரபாசை சந்தித்ததும் இல்லை பேசியதும் இல்லை " என்றார் .
பிரபாசு அளித்த பேட்டியில் , " நான் ஷர்மிளா அவர்களை பார்த்ததும் இல்லை , சந்தித்ததும் இல்லை . இதற்கு முன்னால் என் உடல் நிலையைப் பற்றிய வதந்திகளை பரப்பினர் . ஆனால் இந்த வதந்திகள் குறித்து நான் பதில் அளிக்கவில்லை . ஏனென்றால் வதந்தியை ஒழிக்க அமைதியாக இருப்பதே சிறந்த வழியாக கருதினேன் . ஆனால் இந்த வதந்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . இது மரியாதைத் தனமற்றது . ஒரு திருமணமான தாயை புண்படுத்தும் படியாக இருக்கிறது " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.