திமுக 2014 தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது .இதற்கு என்ன காரணம் என்பதை அறிவதற்கு 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது .அதன் பரிந்துரை படி இன்று முதல் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் .திமுக கட்சி அமைப்பு 65 மாவட்டங்களாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது .இதனை அந்த கட்சியின் பொது செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார் .இந்த அறிவுப்புக்கு இப்போது உள்ள மாவட்ட செயலாலர்களிடையே எதிர்ப்பு இருக்கலாம் .ஏனென்றால் இது அவர்களின் அதிகாரத்தை பிரித்து கொடுக்கும் செயல் ஆகும் .இதற்கு ஸ்டாலினே எதிர்ப்பு தெரிவிக்கலாம் ஏனென்றால் இவர்கள் அனைவரும் ஸ்டாலினின் ஆதரவாளர்கள் .ஆனால் கட்சியை உயிர்பிக்க வேண்டுமானால் இந்த நடவடிக்கை தேவை என்பதை புரிந்து கொள்வார் .ஆனால் புது மாவட்ட செயலாளராக வருபவர் பழையவரின் ஆதரவாளராக இருந்தால் கட்சி உருப்படாது என்றே கூறலாம் .கட்சிக்காக உழைத்தவர்களும் இளைஞர்களும் இந்த பதவிக்கு வர வேண்டும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.