டெல்லியில் இருந்து சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாராளுமன்றத்தில் 55 உறுப்பினர்களும், மேல்-சபையில் 25 உறுப்பினர்களும் இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய எம்.பி.க்கள் இல்லை என்றாலும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.
காங்கிரஸ் கட்சி வளர்ச்சியின் பின்னணியில் ராகுல்காந்தி உள்ளார். பாராளுமன்ற காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர். காங்கிரஸ் கட்சிக்கு பல தியாகங்களை செய்து உள்ளார். அவரின் தியாகத்திற்காக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்விக்காக நிர்வாகிகள் மாற்றப்படுவார்களா? என்பது பற்றி எனக்கு தெரியாது. நான் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிடையாது.
ஆப்கானிஸ்தானில் தமிழக பாதிரியார் கடத்தப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. தீவிரவாத செயலை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.