BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 7 June 2014

பல நாட்டின் அரசுகள் நமது மொபைல் அழைப்புகளை ஒட்டுக் கேட்கிறது :- ஒத்துக் கொண்டது வோடபோன் நிறுவனம் .



உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமான வோடபோன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் , 29 நாடுகள் (இந்தியா உட்பட) தங்கள் நிறுவனத்தின் அழைப்புகளை ஒட்டுக் கேட்க அனுமதி வாங்கியுள்ளது . மேலும் பல இரகசிய வயர்கள் மூலம் வாடிக்கையாளர்களின் அழைப்பு , எஸ்.எம்.எஸ் , இ-மெயில் ஆகியவற்றை பார்க்கும் அதிகாரமும் படைத்துள்ளது . மேலும் இந்த வயர்கள் மூலம் வாடிக்கையாளர்களின் இடங்களையும் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர் .

 மேலும் வோடபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களின் இரகசியங்களை மதிக்கிறது எனவும் ஆனால் நாட்டின் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அது மதிப்பு கொடுத்து செயல்படும் எனக் கூறியது . வோடபோன் முக்கியமாக சேவை செய்யும் 29 நாடுகளில் பல நாடுகளில் இவ்வாறு ஒட்டுக் கேட்க வாரண்ட் தேவை . ஆனால் குறிப்பிட்ட ஆறு நாடுகளில் நிரந்தரமாக ஒட்டுக் கேட்க அனுமதி இருக்கிறது .


அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடன் அமெரிக்க நிறுவனத்தின் ஒட்டுக் கேட்பதை வெளிக்கொண்டு வந்தபின் வோடபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பலரை ஆச்சரியப் படுத்தியுள்ளது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media