உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமான வோடபோன்
நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் , 29 நாடுகள் (இந்தியா உட்பட) தங்கள்
நிறுவனத்தின் அழைப்புகளை ஒட்டுக் கேட்க அனுமதி வாங்கியுள்ளது . மேலும் பல இரகசிய
வயர்கள் மூலம் வாடிக்கையாளர்களின் அழைப்பு , எஸ்.எம்.எஸ் , இ-மெயில் ஆகியவற்றை
பார்க்கும் அதிகாரமும் படைத்துள்ளது . மேலும் இந்த வயர்கள் மூலம்
வாடிக்கையாளர்களின் இடங்களையும் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது என்று
அந்த அறிக்கையில் கூறியுள்ளனர் .
மேலும்
வோடபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களின் இரகசியங்களை மதிக்கிறது எனவும் ஆனால்
நாட்டின் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அது மதிப்பு கொடுத்து
செயல்படும் எனக் கூறியது . வோடபோன் முக்கியமாக சேவை செய்யும் 29 நாடுகளில் பல
நாடுகளில் இவ்வாறு ஒட்டுக் கேட்க வாரண்ட் தேவை . ஆனால் குறிப்பிட்ட ஆறு நாடுகளில்
நிரந்தரமாக ஒட்டுக் கேட்க அனுமதி இருக்கிறது .
அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடன் அமெரிக்க
நிறுவனத்தின் ஒட்டுக் கேட்பதை வெளிக்கொண்டு வந்தபின் வோடபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள
இந்த அறிக்கை பலரை ஆச்சரியப் படுத்தியுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.