BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 7 June 2014

நாட்டில் முதல் முறையாக, ஒரே வழக்கில் 17 போலீசார்கள், கொலைக் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப்பு


2009ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநில டெஹ்ராடூனிற்கு வேலை தேடிச் சென்ற ரன்பீர் சிங் என்ற நபரை திருடியதாகப் புகார் கூறி கைது செய்தனர் போலீசார். விசாரணையின் போது ரன்பீர் சிங் போலீஸ் காவலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இந்த வழக்கில் 17 போலீசாரும் குற்றவாளிகள் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஒரே வழக்கில் 17 போலீசாரும் குற்றவாளிகள் என்று அறிவித்திருப்பது நாட்டில் முதல் முறை என்று கூறப்படுகிறது. இவர்கள் மீது கடத்தல், சதி, கொலை மற்றும் சாட்சிகளை அழிப்பது என்ற பல பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும், ரன்பீர் சிங்கைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் 17 போலீசார் மீது நீதிபதி மாலிக் குற்றம்சாட்டினார். இவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படவுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media