BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 7 June 2014

அமெரிக்க இணைய தளத்தில், தான் எத‌ற்காக நரேந்திர மோடியை புகழ்ந்ததாக விளக்கம் அளிக்கிறார் சசி தரூர்


முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர், அமெரிக்க செய்தி இணைய தளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில், பிரதமர் நரேந்திர மோடியை  புகழ்ந்து இருக்கிறார். அதில் அவர், “தேர்தலுக்கு முன்பு வெறுக்கப்பட்ட நபராக திகழ்ந்தவர், இப்போது தன்னை நவீனமயத்தின், முன்னேற்றத்தின் சின்னமாக மாற்றி வருகிறார்” என கூறி உள்ளார்.

சசி தரூரின் கருத்து பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறுகையில், சசிதரூரை ‘முதிர்ச்சி இல்லாதவர், சந்தர்ப்பவாதி’ என தாக்கினார்.

சசி தரூர் கருத்து, அவரது சொந்தக் கருத்து என காங்கிரஸ் மேலிடம் கூறியது. ஆனாலும், காங்கிரஸ் ஊடகத்துறையின் தலைவர் அஜய் மக்கானுக்கு தன்னிலை விளக்கம் அளித்து சசி தரூர் நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், “குறிப்பிட்ட சில விஷயங்களுக்காக மோடியை புகழ்ந்து உரைத்தேன். இதனால் மோடியின் தொடர் நடத்தை குறித்து மக்கள் எதிர்பார்ப்பு கொள்வார்கள். இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதன் வழியாக நாம் எதிர்காலத்தில் அவரை மதிப்பிட முடியும். எனவேதான் புகழ்ந்து உரைத்தேன்” என விளக்கம் அளித்துள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media