BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 7 June 2014

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு


2012ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஸ்மிருதி இரானி தன்னைப்பற்றி மோசமாகப் பேசினார் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய் நிருபம், அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக செப்டம்பர் 27 ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதே தொலைக்காட்சி விவாதத்தில் சஞ்சய் நிருபம் தன்னை அவதூறு செய்ததாக ஸ்மிருதி இரானியும் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தப் புகாரின் மீதான விசாரணையில் சஞ்சய் நிருபம் விசாரிக்கப்பட்டார். சட்டப்பிரிவு 500-இன் கீழ் சஞ்சய் நிருபம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனைக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media