BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 16 July 2014

பிரிக்ஸ் வங்கி உருவானது , மகிழ்ச்சியில் மோடி





பிரிக்ஸ் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியை 10000 கோடி டாலர் முதலிட்டில் தொடங்க உள்ளார்கள். இந்த வங்கி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தியா தான். நாம் தான் இதற்காக முதலில் இருந்து குரல் கொடுத்து வந்தோம். இந்தியாவின் உத்தரவில் பேரில் , பிரிக்ஸில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் இதில் 2000 கோடி டாலர்களை முதலீடு செய்ய வேண்டும். இந்த வங்கி உருவானதில் இந்தியா பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. இது இவர்களுக்கு மட்டும் உதவாமல் சிறிய நாடுகளுக்கு உதவும் வகையில் உள்ளது.


இந்த வங்கியின் தலைமையகம் ஷாங்காய் நகரில் அமையவுள்ளது. இதன் முதல் தலைவர் பதவி இந்தியாவுக்கு தரப்பட்டு உள்ளது. வங்கி இயக்குனர்கள் தலைவர் பதவி ரஷியாவுக்கு தரப்பட்டு உள்ளது. இந்த வங்கி உருவானதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media