தமிழக சட்டசபையில் நேற்று பெண்களுக்கு நடைபெற்ற திட்டங்கள் பற்றிய விவாதம் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது சுனாமி பற்றிய பேச்சு வந்தது. கருணாநிதி சுனாமி தாக்கிய போது அப்போலோ மருத்துவமனையில் இருந்தார் என்று கூறினார் அமைச்சர் வளர்மதி. இதன் பிறகு பேசிய முதல்வர் ஜெயலலிதா , கருணாநிதி சுனாமியின் தனது தொகுதிகளை மக்களை கூட சென்று சந்திக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் கூற திமுக எம்.எல்.ஏ.க்கள் அனுமதி கேட்டனர் , ஆனால் அவர்களூக்கு அனுமதி தரப்படவில்லை . அதனால் அவர்கள் அவையை விட்டு வெளியேறினார். வெளியே வந்து பதில் கூறிய துரைமுருகன் சுனாமியின் போது கருணாநிதி மருத்துவமனையில் இருந்தார்.அதன் பிறகு தொகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.