BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 16 July 2014

கோஆப்டெக்ஸ்க்கு கடையில்லை ரிலையன்ஸ்க்கு கடை ஒதுக்கீடு - கள்ளக்குறிச்சி நகராட்சியில் நடந்த அநியாயம்



கள்ளக்குறிச்சியில் ஜூலை 9 அன்று புதிய நகராட்சி கட்டிடத்திற்கான கடைகள் ஒதுக்கும் நிகழ்ச்சியின் போது அங்கு ஏற்கனவே இருந்த கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கடைக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தட்டி கேட்ட கோ ஆப்டெக்ஸ் மேனேஜர் தாக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சியின் பிரமுகர் தயவில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் அங்கு இடத்தை பிடித்துள்ளதாக தெரிகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கோஆப்டெக்ஸ் நிறுவனத்தை நம்பி தொழில் செய்யும் ஏழை கைத்தறி நெசவாளர்களுக்கு நகராட்சியும், தமிழக அரசும் செய்யும் துரோகச்செயல் இது என்றும் ஆம் ஆத்மி கட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media