இலங்கைக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை வீரர் குமார் சங்ககாரா புதிய சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிக முறையாக 190 க்கும் அதிகமாக எடுத்த வீரர் என்னும் சாதனை இவர் வசம் வந்தது. இவர் 13 முறை இவ்வாறு எடுத்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனை ஆஸ்திரேலியா வீரர் டான் பிராட்மேன் வசம் இருந்தது. அவர் 12 முறை 190 க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார்.
அவர் இந்த ஆட்டத்தில் 221 ரன்கள் எடுத்தார். அது இவருக்கு 10 வது இரட்டை சதமாகும். டான் பிராட்மேன் 12 இரட்டை சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.