முன்பெல்லாம் நமக்கு ஏதாவது தெரியாது என்றால் நம் முன்னோர்களை கேட்டு தெரிந்து கொள்வோம். ஆனால் இப்போது உள்ள தலைமுறையில் அந்த பழக்கம் இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கு நம்மை விட அதிகம் தெரிந்து இருந்தாலும், அவர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்கு எதை ப்யன்படுத்துகிறார்கள் என்றால் இணையதளத்தை தான். அதுவும் குறிப்பாக கூகுள் தளத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். கூகுள் இல்லாதது எதுவும் இல்லை என நினைக்கிறார்கள், அது மட்டும் இல்லாமல் அது தான் உண்மை என்றும் நினைக்கிறார்கள்.
அவர்களை போல நானும் கூகுளில் தமிழ் என்று டைப் செய்தேன் , அப்போது தமிழ் தொடர்பான போட்டோக்களை தேடி கொண்டு இருந்தது. அதில் தமிழ் என்னும் வார்த்தை அல்லது தமிழை வளர்த்த தலைவர்களின் போட்டோக்கள் வரும் நினைத்தேன் . ஆனால் வந்ததை பார்த்து அதிர்ந்தேன். ஏனென்றால் வந்தவை எல்லாம் தமிழ் நடிகைகளின் போட்டோக்கள். தமிழுக்காக அவர்கள் என்ன செய்தார்கள். அதுவும் அதில் பலர் தமிழ் படங்களில் நடித்த மற்ற மொழி நடிகைகள்.
ஏன் வளர்த்த எந்த தலைவரையும் கூகுளுக்கு தெரியாதா அல்லது தமிழ் என்னும் வார்த்தையே தெரியாதா. இதையே தமிழ் மொழியை பற்றி தெரியாத ஒருவன் இது போல் தமிழை பற்றி தெரிந்து கொள்வதற்கு தமிழ் என டைப் செய்து வந்த போட்டோக்களை பார்த்தால் அவன் தமிழ் மொழியை பற்றி என்ன நினைப்பான். தமிழ் மொழியின் பெருமை என்னவாகும் ??
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.