அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழில் கேட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழிலேயே பதில் அளித்தார். மக்களவைக்கு சென்று தைரியமாக தமிழில் பேசியதற்காக இவரை பலரும் பாராட்டினர். இந்நிலையில் மக்களவையில் முதன்முதலாக தமிழில் பதில் அளித்த மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தான் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அவரும் நிர்மலா சீதாராமனின் தமிழ் உணர்வை பாராட்டினார். 2004-09 ஆட்சி காலத்தில் மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் பாமக வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ். கடந்த 2008-ஆம் ஆண்டு, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் எம்.அப்பாதுரை, புகையிலை பொருட்கள் மீதான எச்சரிக்கை படம் தொடர்பான துணை வினாவை தமிழில் எழுப்பினார். அதற்கு, அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், தமிழில் விடையளித்தார். அவர் கேட்ட மற்றொரு கேள்விக்கும் அவர் தமிழிலையே பதில் சொன்னார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.