வட்டு எறிதலில் இந்திய வீரர் விகாஸ் கவுடா நேற்று 63.64 மீட்டர்கள் எறிந்து இந்தியாவுக்கு தடகள பிரிவில் இருந்து 2014 காமென்வெல்த்தில் முதல் பதக்கத்தை பெற்று தந்தார். இவர் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு இப்போது 31 வயது ஆகிறது. இவர் இதற்கு முன்பு 2010 காமென்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இருந்தார்.
2012 ஒலிம்பிக் போட்டியில் எந்த பதக்கமும் பெறாவிட்டாலும் 8 வது இடத்தை பிடித்தார். அந்த ஒலிம்பிக்கில் இவரும் கிருஷ்னா பூனியாவும் தான் தடகளத்தில் இந்தியாவின் பெயர் இருக்க செய்தார்கள். இல்லையெனில் தடகள போட்டிகளில் இந்தியாவின் பெயர் இல்லாமலே இருந்திருக்கும். பதக்கம் வெல்வதற்கு முன்பு அவரது டிவிட்டர் கணக்கில் இந்தியாவின் டெஸ்ட் தோல்விக்கு வருத்தம் தெரிவித்து இருந்தார். அந்த சோகத்தை போக்க அவர் பதக்கம் வெல்வதாக கூறினார். சொன்னது போலவே செய்தார்.
ஒட்டுமொத்தமாக தடகளத்தில் இந்தியாவுக்கு இது 2 வது பதக்கம் ஆகும். இதற்கு முன்பு 1958 ஆம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் 440 யார்டு போட்டியில் இந்தியாவின் தடகள தெய்வமாக பார்க்கப்படும் மில்கா சிங் தங்கப்பதக்கம் வென்றார். அதன் பின்பு இந்தியர்கள் யாரும் தடகளத்தில் பதக்கம் வெல்லவில்லை. அந்த குறையை 56 ஆண்டுகள் கழித்து இந்த சாதனையை செய்து உள்ளார்.
இவரது சாதனையால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு பெருமை வந்து உள்ளது. தடகளத்திலும் இந்தியர்களால் பதக்கம் வெல்ல முடியும் என்பதை நிருபித்து உள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.