மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வு எழுதும் நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்று இந்திய அளவில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக பயிற்சி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்நிலைத் தேர்வுக்கான வினாத்தாள்களும் மாநில மொழியில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மாணவர்கள் வைத்துள்ளனர். இந்தப் பிரச்சினை கடந்த சில நாட்களாக, நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது. இவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் வாதம் செய்கின்றன. ஆனால் இது குறித்த தங்கள் நிலையை மோடி அரசு இன்னும் சொல்லவில்லை. இதற்கு வெங்கய்யா நாயுடு பதில் அளித்தார். மோடி இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதில் மோடி நடுநிலையான முடிவை ஈடுப்பார் என்று கூறப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.