தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட தொடங்கி விட்டது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கிறது. கடந்த மே 27 ஆம் தேதி அன்று முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஜூன் 1 முதல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று கூறி இருந்தார். ஆனால் அந்த ஜூன் 1 எப்போது வருமோ என இன்று வரை தமிழர்கள் காத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இது மக்களை ஏமாற்றும் செயல் , எனவே இந்த செயலுக்காக ஜெயலலிதா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து கேட்டால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுவதாக ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.