டெல்லி கேங் ரேப் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ரேப் செய்யப்பட்ட நிர்பயா என்னும் பெண் இதனால் தனது உயிரை இழந்தார். இந்நிலையில் அந்த பெண்ணின் பெயரில் பெண் பாதுகாப்பை உறுதி செய்யும் ஸ்கூட்டர் வர உள்ளது. இதனை ஜப்பானை சேர்ந்த யமாசக்கி என்னும் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த வண்டி விரைவில் மார்கெட்டுக்கு வர உள்ளது. இதன் விலை 35 ஆயிரம் ரூபாய் ஆகும். இது பெண்களுக்கு 10 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படுகிறது.
இந்த வண்டியில் ஜிபிஆர்எஸ் கனெக்ஷன் வசதியுள்ளது. இதன் மூலம் ஏதேனும் ஆபத்து வந்தால் ஒரு பட்டனை அழுத்தினால், நம் பெற்றோர்களுக்கு மெசஜ் சென்று விடும் . இது வண்டி இருக்கும் இடத்தை சொல்லி விடும். இந்த வண்டியை ஒட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. இது 25 கிமீ வேகத்தில் செல்லும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.