இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக தான் இருக்கும். எந்திரன் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் 50 கோடி ஆகும். அவர் தான் ஒட்டுமொத்த இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார். இவரது படங்களை பார்ப்பதற்கு உலகமே காத்து கொண்டு இருக்கிறது. சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் யார் என்றால் அது தல அஜித்தும், இளைய தளபதி விஜய்யும் தான். இவர்கள் இருவர் இடையே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற போட்டி நடைபெற்று வருகிறது.
ஆனால் போட்டி இப்போது அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டது. தலயா தளபதியா என்னும் நிலை மாறி தலயா சூப்பர் ஸ்டாரா என்னும் நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடைசியாக அஜித்துக்கு வெளிவந்த ஆரம்பம் மற்றும் வீரம் படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தன. தற்போது அவர் நடித்து வரும் படத்தில் அவருடைய சம்பளம் 40 கோடி , அதில் 12 கோடியை வரியாக செலுத்தி விட்டார். அவரது அடுத்த படத்துக்கு ஏ.எம். ரத்னம் 50 கோடி கொடுப்பதாக கூறி உள்ளார்.
அது நடந்தால் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் மாறுவார். சூப்பர் ஸ்டார் என்னும் இடத்துக்கு அவர் செல்லும் காலம் இன்னும் வெகு விரைவில் உள்ளது என்பதை இது காட்டுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.