மும்பையில் தாதர் சிவாஜி பார்க், பாந்திரா, ஜூகு உள்ளிட்ட கடற்கரைகள் காதல் ஜோடிகளின் சொர்க்க பூமியாக திகழ்கின்றன. மாலை 3 மணியில் இருந்தே கடற்கரைக்கு படையெடுக்க தொடங்கி விடுவார்கள். அங்கு வந்தவர்கள் முதலில் பேசுகிறார்கள் , அதன் பிறகு நேரம் செல்ல செல்ல ஆபாச செயல்களில் ஈடுபடுகிறார்கள். அருகில் யார் இருந்தாலும் அவர்கள் கவலைபடுவதில்லை. இதனால் கடற்கரைக்கு வரும் பலரால் நிம்மதியாக நடமாட முடியவில்லை. குழந்தைகளை இது பாதிக்கும் வண்ணம் உள்ளது.
இது குறித்து போலீஸுக்கு பல புகார்கள் வந்துள்ளது. எனவே போலீஸார் இங்கு வந்து இவை அனைத்தையும் படம் பிடித்துள்ளனர். இதில் 51 ஜோடிகள் பிடிபட்டுள்ளனர். உடனடியாக அந்த ஜோடிகளின் பெற்றோர்களை அழைத்து இதனை காண்பித்துள்ளார்கள். அவர்களை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என எச்சரித்து அனுப்பியுள்ளார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.