கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது இந்திய அணி ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் இல்லாமல் திணறி வந்தது. விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் சிறந்த பேட்ஸ்மனாக செயல்பட முடியவில்லை. அதனால் அவர்களால் அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க முடியவில்லை. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பார்த்திவ் பட்டேலும், தினேஷ் கார்த்திக்கும். எனவே வேறு வழியில்லாமல் ராகுல் டிராவிட்டை கீப்பராக செயல்பட வைத்தார்கள்.
அதன் பிறகு இந்திய தோனி என்னும் சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மன் கிடைத்தார். அணியில் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்டு அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அதன் பிறகு சிறந்த கேப்டனாக செயல்பட்டதால் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராகவும் மாறினார். அவர் இருக்கும் வரை அணிக்கு எந்த கீப்பரும் வர முடியாத நிலை வந்தது. இது குறித்து பார்த்திவ் பட்டேல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய அணியில் தோனி இருக்கும் வரை 2 வது கீப்பர் என்னும் பேச்சுக்கே இடம் இல்லை. உலகின் சிறந்த கீப்பர் மட்டுமில்லாமல் சிறந்த கேப்டனில் அவரும் ஒருவர் என கூறினார்.
தோனி இன்னும் 4 வருடமாவுது விளையாடுவார் எனவே அடுத்து இந்திய அணிக்கு கீப்பர் ஆகும் வாய்ப்பு ஒரு இளம் வீரருக்கு தான் கிடைக்கும் . எனவே பார்த்திவ் பட்டேலும் , தினேஷ் கார்த்திக்கும் அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.