ஆசிய விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கப்பட்டது, போட்டியின் முதல் நாளான இன்று துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஜித்துராஜ் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கத்தையும் ஸ்வேதா சவுத்ரி பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று கணக்கை துவங்கினர்.
அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் 17வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா, இந்தியா, தென்கொரியா, வடகொரியா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், இந்தோனேஷியா உள்பட ஆசிய கண்டத்தை சார்ந்த 45 நாடுகளில் இருந்து சுமார் 10,000 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 36 வகையான போட்டிகள் நடைபெறும்.
இந்தியா 28 விளையாட்டுகளில் பங்கேற்கிறது, மல்யுத்தம், பலுத்தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கிசுடுதல், டென்னிஸ், இறகுப்பந்து போன்ற பிரிவுகளில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் 17வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா, இந்தியா, தென்கொரியா, வடகொரியா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், இந்தோனேஷியா உள்பட ஆசிய கண்டத்தை சார்ந்த 45 நாடுகளில் இருந்து சுமார் 10,000 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 36 வகையான போட்டிகள் நடைபெறும்.
இந்தியா 28 விளையாட்டுகளில் பங்கேற்கிறது, மல்யுத்தம், பலுத்தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கிசுடுதல், டென்னிஸ், இறகுப்பந்து போன்ற பிரிவுகளில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.