தமிழ்நாட்டில் வன்னியர்கள் 1987ம் ஆண்டு தனி இடஒதுக்கீடு கேட்டு போராடியதை போல ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் தங்கள் சமூகத்துக்கு 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தியுள்ளனர். சென்ற முறை மிகப்பெரிய அளவில் நடந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இடஒதுக்கீடு வழங்குவோம் என்று பாரதிய ஜனதா அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் இதை மாநில பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றாததால், வரும் 28-ம் தேதி கராவ்லி மாவட்டத்தில் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக குஜ்ஜார் சமூக உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேசிய குஜ்ஜார் போராட்ட தலைவர்கள் எங்கள் சமூகத்தினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பதாக சட்டசபைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை பா.ஜனதா அரசு நிறைவேற்றவில்லை. எனவே, மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிரவேறு வழியில்லை. எங்கள் கோரிக்கைகளை அலட்சியம் செய்ததால்தான் சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக 4ல் 3 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து பேசிய குஜ்ஜார் போராட்ட தலைவர்கள் எங்கள் சமூகத்தினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பதாக சட்டசபைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை பா.ஜனதா அரசு நிறைவேற்றவில்லை. எனவே, மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிரவேறு வழியில்லை. எங்கள் கோரிக்கைகளை அலட்சியம் செய்ததால்தான் சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக 4ல் 3 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.