தூதரக அதிகாரி மகள் மிரட்டல் மெயில் அனுப்பியதாக தவறான புகார், இந்திய வம்சாவளி மாணவிக்கு ரூ. 1.36 கோடி நஷ்டஈடு வழங்குகிறது நியூயார்க்.
நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றிய தேவசிஷ் பிஸ்வாஸின் மகள் கிருத்திகா (18) அந்நகரில் உள்ள குயின்ஸ் ஜான் பிரவுன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது பள்ளி ஆசிரியர்களுக்கு ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பி மிரட்டல் விடுத்தாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறையில் வைக்கப்பட்டார், இந்த வழக்கில் கிருத்திகா நிரபராதி என்றும் இந்த மிரட்டலை விடுத்தது வேறு ஒரு மாணவர் என்றும் தெரிய வந்தது, மிரட்டல் விடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பெண் ஷாப்பிங் காம்ப்ளெக்சில் இருந்தது வீடியோ ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதற்கு 1.5மில்லியன் டாலர் (சுமார் ரூ. 9 கோடி) நஷ்ட ஈடு வழங்க கோரி நீதிமன்றத்தில் கிருத்திகா வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், கிருத்திகாவுக்கு 2.25 இலட்சம் அமெரிக்க டாலர் வழங்க நியூயார்க் நகர நிர்வாகம் முன்வந்தது. அதை கிருத்திகா ஏற்றுக்கொண்டார். நகர நிர்வாகம், கல்வி வாரியம், காவல்துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் மீது தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கிருத்திகா ஒப்புக்கொண்டார்.
இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கை முடித்து வைப்பதாக மாவட்ட நீதிபதி அறிவித்தார்.
நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரியாக பணியாற்றிய தேவசிஷ் பிஸ்வாஸின் மகள் கிருத்திகா (18) அந்நகரில் உள்ள குயின்ஸ் ஜான் பிரவுன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது பள்ளி ஆசிரியர்களுக்கு ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பி மிரட்டல் விடுத்தாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறையில் வைக்கப்பட்டார், இந்த வழக்கில் கிருத்திகா நிரபராதி என்றும் இந்த மிரட்டலை விடுத்தது வேறு ஒரு மாணவர் என்றும் தெரிய வந்தது, மிரட்டல் விடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பெண் ஷாப்பிங் காம்ப்ளெக்சில் இருந்தது வீடியோ ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதற்கு 1.5மில்லியன் டாலர் (சுமார் ரூ. 9 கோடி) நஷ்ட ஈடு வழங்க கோரி நீதிமன்றத்தில் கிருத்திகா வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், கிருத்திகாவுக்கு 2.25 இலட்சம் அமெரிக்க டாலர் வழங்க நியூயார்க் நகர நிர்வாகம் முன்வந்தது. அதை கிருத்திகா ஏற்றுக்கொண்டார். நகர நிர்வாகம், கல்வி வாரியம், காவல்துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் மீது தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கிருத்திகா ஒப்புக்கொண்டார்.
இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கை முடித்து வைப்பதாக மாவட்ட நீதிபதி அறிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.