BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 31 July 2013

மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ருபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது அறிந்ததே, சென்ற வாரம் 61 ருபாயை எதிர்கால வர்த்தகத்தில் கடந்த ருபாய் மீண்டும் 59 ருபாய் வரை வந்தது.

அப்போது ஏற்றிய பெட்ரோல் விலையை குறைக்க முயலாத பெட்ரோல் நிறுவனங்கள் நேற்று மீண்டும் டாலருக்கு எதிரான ருபாயின் மதிப்பு சரிந்ததை அடுத்து பெட்ரோல் விலையை .70 பைசா ஏற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை குறைந்தால் விலை குறைப்பை பற்றி யோசிக்காத அரசு, கொஞ்சம் ஏறினாலும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஆதரவாக பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது

மொத்த போக்குவரத்திற்க்கும் தற்பொழுது பெட்ரோல் மற்றும் டீசலையே நம்பியுள்ள இந்திய மக்கள் இதனால் பலமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் மற்ற பொருள்களின் விலையும் ஏறி இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் கொஞ்சமும் கவலைப்படாத மத்திய அரசு, அடுத்த வருடம் வர இருக்கும் தேர்தலில் மண்ணையே கவ்வும் என பல மத்தியதர மக்கள் பொதுவிலே பேசுவதை கேட்க முடிகிறது.

மக்களால் மக்களுக்காக அமைக்கப்படுவதே ஜனநாயக அரசு, ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்களின் நலன் குறித்து எந்த அக்கறையும் காட்டுவதில்லை என்பது பல அரசியல் விமர்சகர்களின் கருத்து, இந்த போக்கு பி.ஜே.பி கட்சிக்கு ஓட்டு வங்கியாக மாறும் வாய்ப்புள்ளது என்று ஒரு தரப்பும், தேர்தல் நேரத்தில் விலை குறைப்பையும் சில சலுகைகளையும் காட்டி காங்கிரஸ் மீண்டும் வர முயற்சிக்கும் எனவும் சிலர் தகவல் தெரிவித்தனர்!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media