BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 13 August 2013

தமிழகத்தில் தலைவா ரிலீஸ் - திருட்டு சிடி மூலமாக

தூத்துகுடி டி.வி.டி கடை ஒன்றில் தலைவா திருட்டு டி.வி.டி கிடைப்பதாக தகவல் அறிந்த  தூத்துகுடி விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன் தமது மன்ற உறுப்பினர்களோடு அக்கடைக்கு சென்று சோதனையிட்டார், அதில் தலைவா உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுபட சீடிக்கள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.

அங்கிருந்து காவல்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளனர், அதற்குள் வாக்குவாதம் ஏற்பட்டு டி.வி.டி கடையில் இருந்தவர்கள் விஜய் ரசிகர் மன்றத்தாரால் தாக்கபட்டதாக தெரிகிறது, செய்தி அறிந்து விரைந்து வந்த போலீஸார் சூழலை கட்டுபடுத்த வேண்டி இரு பிரிவினரையும் கைது செய்தனர், பின்னர் விஜய் மன்றத்தார் விடுவிக்கபட்டனர்.

முதல்வன் படம் வெளிவந்த பொழுது அது அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதிக்கு எதிரான படமாக இருக்கிறது என சர்ச்சை கிளம்பியது, இத்தனைக்கும் அது குறித்து கருணாநிதி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, தமிழகத்தில் மதுரையில் மட்டும் முதல்வன் படத்திற்கு எதிர்ப்பு வலுவாக கிளம்பி தினம் இரவு அந்த படம் தி.மு.க குழுமத்தை சேர்ந்தவரால் நடத்தபட்ட சுமங்கலி கேபிள் விசனில் தினம் இரவு காட்டப்படுவதாக சர்ச்சை கிளம்பியது.

அரசியல் ஆசையில் இருக்கும் விஜய் தமது படத்தில் அரசியல் சம்பந்தபட்ட வசனங்கள் வைப்பது ஒன்றும் தமிழ்சினிமாவுக்கு புதிதல்ல, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இன்று வரை அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது மேலும் நகைச்சுவை காட்சிகளாக அரசியல் விமர்சனங்கள் சோ, எஸ்.எஸ்.சந்திரன், மணிவண்ணன் போன்றவர்களால் செய்யபட்டு தான் வந்தது, ஆயினும் தலைவா படம் மட்டும் இந்த சர்ச்சையில் சிக்கியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளதாக அரசியல் மற்றும் சினிமா விமர்சகர் ஒருவர் தெரிவித்தார்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media