BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 13 August 2013

போர் நிறுத்தம் முடிவுக்கு வருமா?

கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டியும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியும் ஒன்பது முறை இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது, கடந்த சில தினங்களுக்கு முன் நடத்திய தாக்குதலில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தியா அமைதியை விரும்பும் நாடென்பதால் நாமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என அமைதி காக்கிறது, இந்தியாவிடமும் தக்க பதிலடி கொடுக்க தேவையான ஆயுத பலமும், ஆட்பலமும் உள்ளது என காங்கிரஸ் தரப்பு சொல்லி வருகிறது.

இந்தியாவிற்குள்ளேயே பேசிக்கொள்கிறார்களே தவிர பாகிஸ்தானுடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த வெளியுறவுதுறையோ, பிரதமரோ நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை, பாகிஸ்தான் ராணுவம் எங்கள் கட்டுபாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் அரசால் சொல்லமுடியாது, இந்தியாவின் தயக்கத்திற்கான காரணம் புரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media