BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 13 August 2013

காவல்துறை கட்டுபாட்டில் மதுரை.

தமிழகத்தில் சில நாட்களாக பா.ஜ.க கட்சி நிர்வாகிகளும் இந்துதுவா அமைப்பு சார்ந்தவர்களும் சமூக விரோதிகளால் கொல்லபட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, தற்பொழுது வரை இந்த கொலைகளை செய்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் விசாரணை நடந்து கொண்டே இருக்கிறது.


இந்நிலையில் வரும் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று மதுரையில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடக்கலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையின் பேரில் மதுரை மாநகரம் மொத்தமும் காவல்துறை கட்டுபாட்டில் எடுக்கபட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி மூன்றடுக்கு போலிஸ் பாதுகாப்பும், தீவிர சோதனையும் நடத்தபட்டு வருகிறது.

மதுரையை சுற்றி 20 சோதனை சாவடிகளில் தொடர் சோதனை நடந்து வருகிறது. ரயில்நிலையத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த சோதனைகளுக்கு போதிய ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், சந்தேகப்படும்படியாக யாரேனும் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறு வணிகவளாகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு தகவல் அனுப்பட்டதாகவும் காவல்துறை அறிவித்திருக்கிறது.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media