BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 13 August 2013

தெலுங்கானா விவகாரம் - பதட்டத்தில் ஆந்திரா.

தனி தெலுங்கானா பிரிப்பது குறித்து காங்கிரஸ் அறிக்கை விட்ட நாளிலிருந்தே இரண்டு பகுதியிலும் தொடர்ந்து பதட்ட நிலை நிலவி வருகிறது, தெலுங்கானா பிரிக்கப்படக்கூடாது என பல சட்டமன்ற, நாடாளுமன்ற உறிப்பினர்கள் ராஜினாமா செய்தனர்.

இதை தொடர்ந்து ஆந்திரா அரசு ஊழியர்கள் அமைப்பு ஆந்திரா அரசை கலைக்க வேண்டும் என அறிக்கை விட்டது, அதற்கு எந்த பதிலும் அவர்களுக்கு திருப்தியாக இல்லாததால் நான்கு லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர், இதை தொடர்ந்து ஆந்திரா போக்குவரத்து துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தது.

திருப்பதி உள்ளிட்ட ஆந்திராவின் பல பகுதிகளுக்கு போக்குவரத்து தொடர்பு துண்டிக்கபட்டது, தொடர் பதட்டம் நிலவி வருவதால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. ஆந்திரா செல்ல இருந்த பயணிகள் அனைவரும் பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் கோயம்பேடு பஸ்நிறுத்தத்திலேயே தங்கி தங்களது இருப்பிடமாக மாற்றி கொண்டிருக்கிறார்கள்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media