BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 15 August 2013

சுதந்திர தின நிகழ்வுகள்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக்கூடாது என விமானநிலையம்,  ரயில்நிலையம் பகுதிகளில் காவல்துறை தொடர் சோதனையில் இருந்து கொண்டிருந்தது நாம் அறிந்ததே, சென்னை விமானநிலையத்தில் வாயிலில் இருந்து ஏழடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இன்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்த போலிஸார் குமார் மற்றும் முகமது ஆகியோர் மீது சந்தேகம் கொண்டு மறைவிட பரிசோதனைக்கு அழைத்து சென்றனர், அப்பொழுது அவர்களிடம் போதை மருந்து இருந்தது கண்டுபிடிக்கபட்டது, அவை எந்த வகை போதைபொருள் என்பது இப்போது வரை தெரியவில்லை, எப்படியாகினும் இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என காவல்துறை தெரிவித்தது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்கலாம் என அணுமின் உற்பத்தி குழுமம் தெரிவித்ததன் அடுத்து இன்று கூடங்குளத்தில் உற்பத்தி தொடங்கியது, இன்று இரவிற்குள் 400 லிருந்து 500 மெகாவாட் வரை உற்பத்தி இருக்கும் என்றும் படிப்படியாக இது ஆயிரம் மெகாவாட்டாக உயரும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது, ஏற்கனவே பாட்னா பகுதியில் நேற்று ஒரு குண்டு வெடித்திருந்தது, அது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள், இன்று மீண்டும் குண்டு வெடித்தது பெரும் அதிர்ச்சிகுள்ளாக்கியது, தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு வாப்பியில்லை இந்த சம்பவத்திற்கு காரணம் உள்நாட்டு நக்ஸலைட்டுகளாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது

இன்று காலை மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்தார், அதற்கு முன்னரே நமது இந்திய பிரதமர் தமது உரையில் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடந்தால் மட்டுமே சுமூகமான பேச்சு வார்த்தை சாத்தியம் என தெரிவித்திருந்தார், பாகிஸ்தான் அதை காதில் போட்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை, நிச்சயம் இது போரில் தான் முடியப்போகிறது என பலர் எச்சரித்து வருகிறார்கள்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media