நன்றி! நன்றி!! நன்றி!!! ஒரு இலட்சம் லைக்குகளை பெற்றது சற்றுமுன் செய்திகள் பக்கம்.
சரியாக 8 மாதங்களுக்கு முன்பு 16ம் தேதி டிசம்பர் 2012ம் ஆண்டு "சற்றுமுன் செய்திகள்" ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. எட்டே மாதங்களில் இன்று ஆகஸ்ட் 15, 2013ல் ஒரு இலட்சம் லைக்குகளை பெற்றுள்ளது சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கம். மே மாதம் தான் 50,000 லைக்குகளை பெற்றிருந்த நிலையில் அடுத்த 50,000 லைக்குகளை மூன்று மாதங்களுக்குள் பெற்றுள்ளது. இதற்கு காரணமான சற்றுமுன் செய்திகள் பக்கத்தின் வாசகர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
சற்றுமுன் செய்திகள் எப்போதும் குரல் அற்றவர்களின் குரலாக உள்ளது, டிவி, பிரஸ் மீடியாக்க்கள் தொடக்கத்தில் மாணவர்களின் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்திற்கு கவரேஜ் கொடுக்காமல் அலட்சிய படுத்திய போது இணைய ஊடகமே அவர்களின் போராட்டத்தை உலகுக்கு சொன்னது. அப்போது மாணவர்களின் நேர்மையான போராட்டத்தின் பக்கம் நின்று செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து வெளியிட்டோம்.
மே மாதம் +2 ரிசல்ட் வெளியானபோது சலூன்கடைக்காரர் மகன் ஏழை மாணவர் டி.தினேஷ்குமார் 1165 / 1200 மதிப்பெண்கள் எடுத்திருந்த போதும் அவருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பிருந்தும் அதற்கான பொருளாதார வசதி இல்லாமல் இருந்த நிலையில் சற்றுமுன் செய்திகள் தொடர்ந்து அவர் குறித்து செய்திகள் வெளியிட்டது மட்டுமின்றி சற்றுமுன் செய்திகள் பக்கத்தில் விளம்பரம் செய்ய அனுமதித்து அந்த விளம்பரதாரர்கள் மாணவர் டி.தினேஷ்குமாருக்கு ரூ.8,000 பண உதவி செய்தனர். மேலும் @Kumaresan Manoharan என்கிற சற்றுமுன் செய்திகள் வாசகர் முயற்சி எடுத்து அம் மாணவருக்கு கவுன்சிலிங் செல்வதற்கான பண உதவிகள் செய்தார், மேலும் அம்மாணவன் மருத்துவ கல்வி முழுவதும் படிப்பதற்கு தேவையான பொருளாதார செலவுகளை @Kumaresan Manoharan என்பவரின் நண்பர்கள் முயற்சியால் கோவையை சேர்ந்த டிரஸ்ட் ஏற்றுக்கொண்டது. அம்மாணவனும் தற்போது கோவை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாண்டு மருத்துவம் படிக்கிறார், இந்த நேரத்தில் @Kumaresan Manoharan அவர்களுக்கு எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
பல நேரங்களில் செய்திகளை முந்தி தருகிறோம், நிறைய செய்திகளை பிற காட்சி ஊடகங்கள், பிற இணையதளங்கள் தருவதற்கு முன்பே தந்துள்ளோம், அப்படி ஒரு செய்தியாக நடிகை கனகா உயிருடன் இருந்த போதே இறந்துவிட்டதாக தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் வெளியிட்ட செய்தியை போலவே நாங்களும் வெளியிட்டுவிட்டோம், அதற்கு அப்போதே மன்னிப்பு கோரியிருந்தோம், மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கோருகிறோம்.
சற்றுமுன் செய்திகள் பக்கம் ஒரு இலட்சம் லைக்குகள் பெற்றதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவிக்கும் அதே நேரம் தொடர்ந்து எங்கள் செய்திகளை படிப்பது மட்டுமின்றி உங்களிடம் செய்திகள் இருந்தால் அதை பகிர நினைத்தால் எங்கள் பக்கத்தில் அனுப்புங்கள், நாங்கள் பகிர்கிறோம். உங்கள் விமர்சனங்களையும் எங்களுக்கு தொடர்ந்து அனுப்புங்கள்,
சற்றுமுன் செய்திகள் எப்போதும் குரலற்றவர்களின் குரலாகவும், உண்மையின் பக்கம் இருப்போம் என்றும் இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்கள் நண்பர்களுக்கும் நமது சற்றுமுன் செய்திகள் பக்கத்தை ஷேர் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்
சற்றுமுன் செய்திகள் இணையதளம் http://www.satrumun.net/
எங்கள் மின்னஞ்சல் முகவரி satrumun.net@gmail.com
சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கம் http://www.fb.com/Satrumun
சற்றுமுன் செய்திகள் டிவிட்டர் பக்கம் http://www.twitter.com/satrumun_
சரியாக 8 மாதங்களுக்கு முன்பு 16ம் தேதி டிசம்பர் 2012ம் ஆண்டு "சற்றுமுன் செய்திகள்" ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. எட்டே மாதங்களில் இன்று ஆகஸ்ட் 15, 2013ல் ஒரு இலட்சம் லைக்குகளை பெற்றுள்ளது சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கம். மே மாதம் தான் 50,000 லைக்குகளை பெற்றிருந்த நிலையில் அடுத்த 50,000 லைக்குகளை மூன்று மாதங்களுக்குள் பெற்றுள்ளது. இதற்கு காரணமான சற்றுமுன் செய்திகள் பக்கத்தின் வாசகர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
சற்றுமுன் செய்திகள் எப்போதும் குரல் அற்றவர்களின் குரலாக உள்ளது, டிவி, பிரஸ் மீடியாக்க்கள் தொடக்கத்தில் மாணவர்களின் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்திற்கு கவரேஜ் கொடுக்காமல் அலட்சிய படுத்திய போது இணைய ஊடகமே அவர்களின் போராட்டத்தை உலகுக்கு சொன்னது. அப்போது மாணவர்களின் நேர்மையான போராட்டத்தின் பக்கம் நின்று செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து வெளியிட்டோம்.
மே மாதம் +2 ரிசல்ட் வெளியானபோது சலூன்கடைக்காரர் மகன் ஏழை மாணவர் டி.தினேஷ்குமார் 1165 / 1200 மதிப்பெண்கள் எடுத்திருந்த போதும் அவருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பிருந்தும் அதற்கான பொருளாதார வசதி இல்லாமல் இருந்த நிலையில் சற்றுமுன் செய்திகள் தொடர்ந்து அவர் குறித்து செய்திகள் வெளியிட்டது மட்டுமின்றி சற்றுமுன் செய்திகள் பக்கத்தில் விளம்பரம் செய்ய அனுமதித்து அந்த விளம்பரதாரர்கள் மாணவர் டி.தினேஷ்குமாருக்கு ரூ.8,000 பண உதவி செய்தனர். மேலும் @Kumaresan Manoharan என்கிற சற்றுமுன் செய்திகள் வாசகர் முயற்சி எடுத்து அம் மாணவருக்கு கவுன்சிலிங் செல்வதற்கான பண உதவிகள் செய்தார், மேலும் அம்மாணவன் மருத்துவ கல்வி முழுவதும் படிப்பதற்கு தேவையான பொருளாதார செலவுகளை @Kumaresan Manoharan என்பவரின் நண்பர்கள் முயற்சியால் கோவையை சேர்ந்த டிரஸ்ட் ஏற்றுக்கொண்டது. அம்மாணவனும் தற்போது கோவை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாண்டு மருத்துவம் படிக்கிறார், இந்த நேரத்தில் @Kumaresan Manoharan அவர்களுக்கு எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
பல நேரங்களில் செய்திகளை முந்தி தருகிறோம், நிறைய செய்திகளை பிற காட்சி ஊடகங்கள், பிற இணையதளங்கள் தருவதற்கு முன்பே தந்துள்ளோம், அப்படி ஒரு செய்தியாக நடிகை கனகா உயிருடன் இருந்த போதே இறந்துவிட்டதாக தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் வெளியிட்ட செய்தியை போலவே நாங்களும் வெளியிட்டுவிட்டோம், அதற்கு அப்போதே மன்னிப்பு கோரியிருந்தோம், மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கோருகிறோம்.
சற்றுமுன் செய்திகள் பக்கம் ஒரு இலட்சம் லைக்குகள் பெற்றதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவிக்கும் அதே நேரம் தொடர்ந்து எங்கள் செய்திகளை படிப்பது மட்டுமின்றி உங்களிடம் செய்திகள் இருந்தால் அதை பகிர நினைத்தால் எங்கள் பக்கத்தில் அனுப்புங்கள், நாங்கள் பகிர்கிறோம். உங்கள் விமர்சனங்களையும் எங்களுக்கு தொடர்ந்து அனுப்புங்கள்,
சற்றுமுன் செய்திகள் எப்போதும் குரலற்றவர்களின் குரலாகவும், உண்மையின் பக்கம் இருப்போம் என்றும் இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்கள் நண்பர்களுக்கும் நமது சற்றுமுன் செய்திகள் பக்கத்தை ஷேர் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்
சற்றுமுன் செய்திகள் இணையதளம் http://www.satrumun.net/
எங்கள் மின்னஞ்சல் முகவரி satrumun.net@gmail.com
சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கம் http://www.fb.com/Satrumun
சற்றுமுன் செய்திகள் டிவிட்டர் பக்கம் http://www.twitter.com/satrumun_
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.