BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 15 August 2013

இன்று 67 வது சுதந்திர தினம்.

சுதந்திர தினத்தை ஒட்டி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்தியர்களுக்கு வாழ்த்து உரை ஆற்றினார், அதில் இந்தியாவில் தீவிரவாதம், பிரிவினைவாதம் பெருமளவு குறைந்து விட்டதாகவும் மக்களும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்தில் வாழவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்திய ராணுவர்கள் ஐந்து பேர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டதை குறித்து  பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து செயல்படவேண்டும், இப்பேச்சு வார்த்தை இனி ஒரு பொழுதும் இம்மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருக்க இது உதவும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர், பண வீக்கத்தை குறைக்க தேவையானவற்றை அவரது மந்திரி சபை செய்து வருவதாக தெரிவித்தார், புதிய திறன் உள்ளவர்களுக்கு மாதம் 10,000 மானியமாக வளங்கப்படும் திட்டம் விரைவில் அறிமுகமாகும் என்றும் தமது உரைவில் பிரதமர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தினத்தில் கொடியேற்ற வேண்டும் என்பதற்காக கடந்த 12 ஆம் தேதி கொடாநாட்டில் இருந்து சென்னை திரும்பியிருந்தார், சர்ச்சைக்குள்ளாகாது என்று இருந்தால் ஒருவேளை அங்கிருந்தே வீடியோ மூலம் கொடி ஏற்றியிருப்பார் - இது நமது செய்தியல்ல நாட்டு மக்கள் பேசிக்கொண்டது.

சுதந்திரம் நமது உரிமை என்றாலும் அதை நம் கடமை போல் நினைத்து செயலாற்ற வேண்டும், தன்னலமற்று கடமையோடு பணியாற்றினால் இந்தியாவை வல்லரசாக்கி விடலாம் என தமது உரையில் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் அடுத்த டார்கெட் பிரதமர் பதவி தான், அதனால் தான் மொத்த இந்தியாவின் வல்லரசு ஆவதை குறித்து பேசியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media