BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 15 August 2013

மீண்டும் கவுண்டமணி!...

தமிழ் திரையுலகில் என்றும் மறுக்க முடியாத நகைச்சுவை நாயகனாக பெயரெடுத்தவர் நடிகர் கவுண்டமணி, இவரது நக்கல், நையாண்டிக்காகவே ஒரு நேரத்தில் திரைப்படங்கள் ஓடின, பெரிய இயக்குனர்களாக இருந்தாலும் எத்தனையோ வெற்றி படம் கொடுத்தவர்களும் கவுண்டமணி கால்ஷீட் கொடுத்தால் தான் சூட்டிங் என்று காத்திருந்த காலமும் இருந்தது.

2003 வாக்கில் மஞ்சல்காமாலையால் பாதிக்கபட்ட அவர் அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார், சற்றே இளைந்த உடலுடன் மீண்டும் நடிக்க வந்தாலும் சிம்பு நடித்த மன்மதன் படத்தோடு மீண்டும் சிகிச்சைக்கு சென்று விட்டார், இவர் 750 திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர், மூன்று படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

தற்போது கே.பாக்யராஜ் மகன் சாந்தனு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மீண்டும் கவுண்டமணியின் நகைச்சுவையை ரசிக்கலாம் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி, கவுண்டமணி 490 என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இவராகவே இட்டுகட்டி நக்கலாக பேசும் சில வசனங்கள் திரை தவிர்த்து பொது வாழ்விலும் மக்கள் புழக்கத்தில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது.

சில உதாரண்ங்கள்

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா

இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா

நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடிலப்பா





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media