தொடர்ந்து கச்சா எண்ணைய் விலை உயர்ந்து வந்ததாலும், கடந்த சில நாட்களாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாலும் எண்ணைய் நிறுவனங்கள் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதாக கூறி தொடர்ந்து எண்ணைய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கொண்டே இருந்தது.
பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்து விடுவோம் என சுதந்திர தின உரையில் பிரதமர் சொல்லி வந்தாலும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமே பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான் என அறியாமல் இருப்பது வியப்பு, ஒரு பொருளில் தயாரிப்பு விலையுடன் அதன் போக்குவரத்து செலவுகளும் சேர்ந்து தான் சில்லறை விற்பனை விலை நிர்ணயிக்கப்படுகிறது, பெட்ரோல், டீசல் விலை குறையாமல் எவ்வாறு பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரப்போகிறார் பிரதமர்.
இந்நிலையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்கள் ஐம்பது, ஐம்பது பைசாவாக ஏற்றுவதால் நட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை, டீசல் விலையை ஒரே தடவையில் 3 ரூபாய் ஏற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என எண்ணைய் நிறுவங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது.
இது ஜனநாயக அரசா அல்லது முதலாளிகள் அரசா என்ற சந்தேகம் மக்களுக்கு பல நாட்களாகவே இருக்கிறது, இம்முறையும் எண்ணைய் நிறுவனங்களுக்கு சாதகமாகவே அரசு செயல்படம் என்றே தங்கள் தலைவிதியை நினைத்து நொந்து கொண்டுள்ளார்கள் இந்திய மக்கள்.
மேலும் அந்நிய முதலீடு இந்தியாவில் வேலை வாய்ப்பையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என நிதி அமைச்சர் சொல்லி வருகிறார், சிறு வியாபாரிகள் குறித்து அவருக்கு சிறிதும் கவலை இருப்பதாக தெரியவில்லை.
நட்டத்தில் இயங்கும் எண்ணைய் நிறுவங்களின் 2009-2010 லாப பட்டியலை பாருங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.