BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 15 August 2013

சுதந்திரதினம் - மாணவர்கள் கறுப்புதின ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 மாணவர்களை அண்ணாமலைநகர் போலீஸார் கைது செய்தனர்.

அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு ஈழத்தமிழர் பாதுகாப்பு மாணவர் கூட்டமைப்பு மற்றும் மாணவர் விடுதலை இயக்கம் சார்பில் நீதிவள்ளல் தலைமையில் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இந்தியஅரசு எவ்வித நடவடிக்கை இல்லை. இதுவே ஒரு வடநாட்டினர் தாக்கபட்டால் குரல் கொடுக்கிறார்கள், இந்தியாவில் முழுமையான சுதந்திரம் இல்லை எனவே சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதாக கூறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.உதயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் 26 பேரை கைது செய்தனர்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media