BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 16 August 2013

நீர்மூழ்கி கப்பல் வெடித்தது சதிவேலையா - கருணாநிதி

இரு தினங்களுக்கு முன் இந்திய கப்பற்படையை சேர்ந்து நீர்மூழ்கி கப்பல் ஒன்று வெடித்து விபத்துகுள்ளானது, அதில் மேல் தட்டில் இருந்த நான்கு பேர் மட்டும் நீரில் குதித்தி உயிர் தப்பினர், உள்ளே சிக்கியிருந்த 18 பேரின் நிலை என்னவென்று அறியமுடியா சூழலில் தீ அணையாமல் இருந்தது, 18 தீயணைப்பு வாகனங்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

நீர்மூழ்கி கப்பல் சேறு அதிகமாக இருந்த பகுதியில் மூழ்கியதால் மீட்பு பணிகள் மெதுவாகவே நடந்தது, இன்று மூன்று உடல்கள் மீட்கப்பட்டது, தீவிபத்தில் சிக்கி உடல் முழுவதும் கருகிய நிலையில் இருந்ததால் அவர்கள் யார் என்று அடையாளம் காணமுடியவில்லை, அவர்களது உடல்களை டி.என்.ஏ சோதனை செய்து அவர்கள் உறவினர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விபத்து இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தீவிரவாதிகளால் செய்யபட்ட சதியாக இருக்குமோ என சந்தேகம் வருகிறது, அரசு இதை தீர விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.




1 comment :

  1. theeveera vesaarani seyuthu ithillum oollal nadanthu irruku endru solluvargal paaruingal.. allathu sari saitha peragu ithill sari saiyaa pattathil oollal endru kuruvaarugal paaruingal...

    ReplyDelete

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media