BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 14 August 2013

நடிகர் விஜயின் பணிவான வீடியோ பேச்சு.......

தலைவான்னு பேரு வச்சதில் இருந்தே ஆரம்பித்துவிட்டது சர்ச்சை, விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு அவரது தந்தை எடுத்து வைக்கும் படிகட்டுகளுல் ஒன்றாக தான் இதுவும் இருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ விஜயின் பிறந்தநாள் நடத்த இருந்த இடத்தை தரமுடியாது என மறுத்து விஜய்க்கு இவ்வருடத்தின் முதல் அதிர்ச்சியூட்டினர்.

படம் திரையிடப்படும் திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தான் திரையரங்க உரிமையாளர்கள் தலைவா படத்தை வெளியிட மறுத்ததன் காரணம் என முதலில் அறியபட்டாலும், கேளிக்கை வரி சலுகை கிடைக்காமல் போனதால் வசூலில் 28% கேளிக்கை வரிக்காக கொடுக்க வேண்டியிருக்கும் அதனால் போட்ட முதலை கூட எடுக்க முடியாது என தமிழக தியேட்டர் அதிபர்கள் தயங்குவதாலும் படம் வெளியாகவில்லை என்று தகவலும் வந்தது.

அதே நேரம் படத்தில் ” முதலில் பெத்த அம்மாவை பாருடா, அப்புறம் மத்த அம்மாவை பார்க்கலாம்: என்ற சர்ச்சைக்குறிய வசனம் இருந்ததாகவும், இதுகுறித்து உளவுதுறையின் மூலம் செய்தி முதல்வர் காதுக்கு போய் படத்துக்கு எவ்வகையில் இடையூறு செய்ய முடியுமோ அதை செய்யுங்கள் என்று சொன்னதாகவும் எதிர் கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று வெளி வந்த வீடியோ பேச்சு ஒன்றில் விஜய் அதிமுக அடிப்படை தொண்டரை போலயே பேசியுள்ளார்.
அடையாளம் தெரியாத சிலரின் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக படம் வெளியாவது தடைபட்டிருக்கிறது, உங்களை போலவே நானும் ஒவ்வொரு நாளும் படம் வெளியாகிவிடும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன், எனது மற்ற படங்கள் வெகு சிறப்பாக வந்திருந்தாலும் அதை பற்றி நான் எங்கேயும் பேசியதில்லை. இப்படம் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் அம்மா சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார், அவர் மீது என்றும் எனது மதிப்பும், மரியாதையும் குறையாது, அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டிருக்கிறேன், சுதந்திரதின விழா ஏற்பாடுகளில் இருப்பதால் இன்னும் இரண்டொரு நாளில் சந்திப்போம் என நம்புகிறேன், அம்மா அவர்கள் மனசு வைத்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு சுமூக முடிவு கிடைக்கும். எப்படியும் இன்னும் சில தினங்களில் படம் வெளியாகிவிடும் என்பதால் யாரும் திருட்டு டி.வி.டியில் பார்த்து அதை ஊக்குவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

விஸ்வரூம் படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்னரே டிடிஹெச் மூலம் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் என அறிவித்ததால் தியேட்டர் அதிபர்கள் வெளியிட மறுத்தார்கள், அதன் பின் இஸ்லாமிய அமைப்புகள் அவர்களை இழிவு படுத்துவது போல் காட்சிகள் இருப்பதாக கூறி தடை வாங்கியது, அதற்கு தமிழக முதல்வரே காரணம் என பேசப்பட்டது, ஒருசாரர் ஜெயா டீவியில் விஸ்வரூபம் படத்தின் உரிமம் கிடைக்காமல் அரசியல் செய்கிறார்கள் என சொல்ல, ஜெயா டீவிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா பேட்டி அளித்தார்.

அநேகமாக தலைவா படத்தின் மூலம் இன்னும் எதில் எதில் எல்லாம் ஜெயலலிதா சம்பந்தபடாமல் இருக்கிறார் என தெரியவர வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் நகைச்சுவையாக சொல்லி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media