தே.மு.தி.க கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமசந்திரன் இன்று தமிழக முதல் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் கட்சி ஆடம்பித்த பொழுது அதிமுகவில் இருந்த மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமசந்திரன் விஜயாகாந்த் கட்சியில் சேர்ந்தர்.
அவரது அனுபவம் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைய விஜயகாந்த் மட்டும் வெற்றியடைந்தார். அந்த தேர்தலில் தேமுதிக கட்சி வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வில்லை என்பது குறிப்பிடதக்கது.
சென்ற தேர்தலுக்கு முன்பு வரை நாங்கள் எப்போதும் மக்கள் கூட்டணி என சொல்லி வந்த விஜயகாந்த் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எங்கள் கொள்கைகளுடன் உடன்படுபவர்களுடன் கூட்டணி வைத்து கொள்வோம் என அறிவித்தார். தினம் குடித்து விட்டு சட்டமன்றம் வருகிறார் என ஜெயலலிதாவாலயே விமர்சிக்கபட்ட விஜயகாந்த் சென்ற சட்டமன்ற தேர்தலில் அவருடனே கூட்டணி வைத்தார். அந்த கூட்டணிக்கு பெரிதும் பாலமாக இருந்தது பண்ருட்டி ராமசந்திரன் தான் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
29 தொகுதியில் வெற்றி பெற்ற தேமுதிக, எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது, அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்த்த விஜயகாந்த் அனைத்து இடங்களிலும் அதிமுக தனித்து நிற்கும் என அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கவில்லை. தாம் கூட்டணியில் இல்லை என்பது அப்போது தான் அவருக்கு தெளிவானது.
மேலும் அவரது கட்சியிலிருந்து ஏழு எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டுக்காக முதல்வரை சந்தித்தோம் என்று ஜெயலலிதாவை வரிசையாக சந்திக்க அவர்கள் அறிவிக்கப்படாத அதிமுக எம்.எல்.ஏ ஆகினர். சில தினங்களுக்கு முன் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தமது வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என நம்பிய விஜயகாந்த் அதிலும் ஏமாற்றப்பட்டார்.
காங்கிரஸ், திமுகாவுக்கு ஆதரவளித்தது அறிவிக்கபடாத கூட்டணியாகவே தெரிந்தது, திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பாத விஜயகாந்த் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவார் எனவே பலராலும் பேசப்பட்டது, இந்நிலையில் இன்று தேமுதிக வை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது கட்சி சார்ந்த சந்திப்பா அல்லது மரியாதை நிமித்தமான சந்திப்பா என இப்பொழுது வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. ஒருவேளை இவரும் அறிவிக்கபடாத அதிமுக எம்.எல்.ஏ ஆகபோகிறாரா என பலர் ஆர்வத்துடம் தமிழக அரசியலை கவனித்து வருகின்றனர்.
அவரது அனுபவம் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைய விஜயகாந்த் மட்டும் வெற்றியடைந்தார். அந்த தேர்தலில் தேமுதிக கட்சி வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வில்லை என்பது குறிப்பிடதக்கது.
சென்ற தேர்தலுக்கு முன்பு வரை நாங்கள் எப்போதும் மக்கள் கூட்டணி என சொல்லி வந்த விஜயகாந்த் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எங்கள் கொள்கைகளுடன் உடன்படுபவர்களுடன் கூட்டணி வைத்து கொள்வோம் என அறிவித்தார். தினம் குடித்து விட்டு சட்டமன்றம் வருகிறார் என ஜெயலலிதாவாலயே விமர்சிக்கபட்ட விஜயகாந்த் சென்ற சட்டமன்ற தேர்தலில் அவருடனே கூட்டணி வைத்தார். அந்த கூட்டணிக்கு பெரிதும் பாலமாக இருந்தது பண்ருட்டி ராமசந்திரன் தான் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
29 தொகுதியில் வெற்றி பெற்ற தேமுதிக, எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது, அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்த்த விஜயகாந்த் அனைத்து இடங்களிலும் அதிமுக தனித்து நிற்கும் என அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கவில்லை. தாம் கூட்டணியில் இல்லை என்பது அப்போது தான் அவருக்கு தெளிவானது.
மேலும் அவரது கட்சியிலிருந்து ஏழு எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டுக்காக முதல்வரை சந்தித்தோம் என்று ஜெயலலிதாவை வரிசையாக சந்திக்க அவர்கள் அறிவிக்கப்படாத அதிமுக எம்.எல்.ஏ ஆகினர். சில தினங்களுக்கு முன் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தமது வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என நம்பிய விஜயகாந்த் அதிலும் ஏமாற்றப்பட்டார்.
காங்கிரஸ், திமுகாவுக்கு ஆதரவளித்தது அறிவிக்கபடாத கூட்டணியாகவே தெரிந்தது, திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பாத விஜயகாந்த் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவார் எனவே பலராலும் பேசப்பட்டது, இந்நிலையில் இன்று தேமுதிக வை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது கட்சி சார்ந்த சந்திப்பா அல்லது மரியாதை நிமித்தமான சந்திப்பா என இப்பொழுது வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. ஒருவேளை இவரும் அறிவிக்கபடாத அதிமுக எம்.எல்.ஏ ஆகபோகிறாரா என பலர் ஆர்வத்துடம் தமிழக அரசியலை கவனித்து வருகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.