BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 14 August 2013

அடங்காத பாகிஸ்தான்!

பாகிஸ்தானை சேர்ந்த இணையதளம் ஒன்று இந்தியாவை மிகவும் கேவலமாக சித்திரிக்கும் வகையில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறந்து இந்திய வீரர்கள் ஐந்து பேரை கொன்றதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து எல்லை பகுதியில் பதட்டம் ஏற்படும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டு தான் இருக்கிறது.

பாராளுமன்ற எதிர்கட்சிகள் தொடர்ந்து கொடுத்து வரும் நெருக்கடியின் பேரில் இந்தியஅரசு, பாகீஸ்தான் அரசுடன் பேசியே ஆக வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது, பாகிஸ்தான் பிரதமர் தமது அறிக்கையில் தாம் இந்தியாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக சொன்னாலும் அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை, இந்தியா தரப்பில் பேச இருப்பவர்கள் பேச்சை ஒரு பொது இடத்தில் வைத்து பேச வேண்டும் என்று கூறிய அறிக்கை இந்தியா பயந்து போய் உள்ளது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது, அதை தொடர்ந்து பாகிஸ்தான் இணையத்தளம் ஒன்று வெளியிட்ட கேலிச்சித்திரம் இந்தியாவை கேவலமாக சித்திரிப்பது போல் இருந்தது.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media