BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 14 August 2013

வேலியே பயிரை மேய்ந்த கதை!..

உத்திரபிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள காகெரு கிராமத்தில் வீட்டினில் தனியாக இருந்த 30 வயது பெண் இருந்துள்ளார், அப்பொழுது  தீபக் ரதி மற்றும் விகாஸ் சவுத்ரி என்ற இரண்டு கான்ஸ்டபிள் உள்ளே புகுந்து துப்பாக்கி முனையில் அப்பெண்ணை பலவந்தமாக வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார்கள் மேலும் அவரது வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றையும் திருடி எடுத்து வைத்து கொண்டார்கள்.

இதை செய்தது நாங்கள் தான் என வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்றும், காவல்துறையில் இருக்கும் எங்களை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது என்றும் மிரட்டி சென்றுள்ளனர், ஆகினும் அப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர், அந்த இரண்டு காவல்துறையினர் மீது வன்புணர்வு, கொலைமிரட்டல், ஆயுதம் காட்டி மிரட்டுதல், கொள்ளை போன்ற பல வழக்குகள் பதிவு செய்துள்ளது காவல்துறை.

இச்சம்பவம் பக்கத்து கிராம பகுதிகளுக்கும் தெரியவந்ததால் அனைவரும் திரண்டு வந்து அந்த இரு காவலருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர், உதவி ஆணையர் உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

# இவனுங்க எதுக்கு போலிஸ்ல சேர்ந்தானுங்க, அரசியலுக்கு போயிருக்கலாம்ல




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media