BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 14 August 2013

ஒரு லட்சம் போலிஸார் பாதுகாப்பில் சுதந்திரதினம்!

சுதந்திரம் என்றாலே நாம் பாதுகாப்பாக இருக்கிறோம், நம்மை தொந்தரவு செய்ய இங்கே யாருமில்லை என்ற அர்த்தத்தில் தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் சில வருடங்களாகவே சுதந்திரதினம், குடியரசு தினம் என்றால் சோதனை என்ற பெயரில் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாவது அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் போலிஸார் பாதுகாப்பிற்காக குவிக்கபட்டுள்ளனர், எந்த அவசர விடுப்பும் அவர்களுக்கு மறுக்கபட்டுவிட்டது, அவர்கள் மட்டுமில்லாது கமாண்டோ படைகள் மற்றும் ரயில்வே போலிஸாரும் தமிழகமெங்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் மட்டும் 14000 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள், சென்னை விமானநிலையத்தில் கமாண்டோ படையினருடன் சேர்ந்து மீனம்பாக்கம் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த வாகனமும் இரண்டு நிமிடத்திற்கு மேல் விமானநிலைய வாயிலில் நிறுத்த அனுமதிக்கபடவில்லை, பயணிகள் மட்டுமின்றி அவர்களை வழியனுப்ப வரும் உறவினர்களும் சோதனைக்கு உட்படுத்த படுகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து ரயில்நிலைங்களிலும் காவல்துறை மற்றும் ரயில்வே போலிஸார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், அனைத்து ரயில்நிலைங்களிலும் மோப்பநாய் உதவியுடன் தொடர் சோதனை நடந்து வருகிறது.  இங்கேயும் பயணிகளின் அனைத்து உடமைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது

இந்நிலையில் காஷ்மீர் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற இரண்டு தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் இந்தியாவில் சதி செயல்கள் செய்ய உள்நுழைய முயற்சித்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media